இந்து மத சாமியார் ஒருவர் முஸ்லிம் பெண்களை இந்து மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள மதீநாத் மாவட்டத்தில் உள்ள அகஸ்திய முனி ஆசிரமத்தில் வசித்து வருபவர் ஆச்சார்ய பண்டிட் கே.கே.சங்கதர் என்பவரே இவ்வாறாக முஸ்லிம் பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆச்சார்ய பண்டிட் கே.கே.சங்கதர் பல்வேறு இந்து குழுக்களுடன் தொடர்பில் உள்ளத்துடன் மற்றும் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்துள்ளார்.
அவ்வாறாக தன்னிடம் பேசும் முஸ்லீம் பெண்களை மதம் மாற்றம் செய்து இந்து காதலருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவ்வாறு, சுமார் 78 முஸ்லிம் பெண்களை அந்த சாமியார் இந்து மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அவரைப் பற்றிய தகவலின் அடிப்படையில் நாளிதழ் ஒன்று நடத்திய விசாரணையின் பொழுது இந்த உண்மை தெரியவந்ததுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறை ஒரு பெண்ணை இந்துவாக மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்கு அடுத்து பல இஸ்லாமிய பெண்களை இதே போன்று மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.