திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமன்
பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேரை கைது செய்துள்ளதாக
கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா
இடிமன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேரை கிண்ணியா பொலிசார் நேற்றைய தினம் (1) இரவு
கைது செய்துள்ளனர்.
இதன்போது சொகுசு வாகனம் ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது
செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச்
சேர்ந்தவர்கள் எனவும் கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி ஒன்றில்
வேட்பாளராக களமிறங்கிய பெண் ஒருவரின் வீட்டில் புதையல் தோண்டுவதற்கான பூசை
நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன் இன்றையதினம் (2) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.