• May 13 2024

Sharmi / Jun 23rd 2023, 12:59 pm
image

Advertisement

திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நட்புறவு ஒன்று கூடல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட செயலக கலாசார பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இரு மாவட்டங்களையும் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது இரு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களின் நடனங்கள், பாடல், சீனடி விளையாட்டு உள்ளிட்ட பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.அத்தோடு கலைஞர்களுக்கு பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டன.

இதில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்கிரம,அநுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சாமில விக்கிரம ஆராய்ச்சி, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் எஸ்.சுதாகரன் ,அநுராதபுரம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 



அனுராதபுரம்- திருமலை கலைஞர்கள் சந்திப்பு.samugammedia திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நட்புறவு ஒன்று கூடல் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இந்நிகழ்வை திருகோணமலை மாவட்ட செயலக கலாசார பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.இதில் இரு மாவட்டங்களையும் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.இதன்போது இரு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்களின் நடனங்கள், பாடல், சீனடி விளையாட்டு உள்ளிட்ட பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.அத்தோடு கலைஞர்களுக்கு பாரம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டன.இதில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்கிரம,அநுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சாமில விக்கிரம ஆராய்ச்சி, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் எஸ்.சுதாகரன் ,அநுராதபுரம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement