தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக,வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது மும்பை மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் காற்று மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை. வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக,வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது மும்பை மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் காற்று மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.