யாழ்ப்பாணம் தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில்
இன்றையதினம்(28) தென்னிலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர்
குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும்
குழுவினருடன் இணைந்தனர்.
இவ்வாறு
தென்னிலங்கையிலிருந்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டக்
களத்திற்கு வருகை தந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில முற்போக்குவாதிகளுக்கு, சட்டவிரோத விகாரை தொடர்பான ஆக்கிரமிப்புக்களை சட்டத்தரணி
காண்டீபன் விளங்கப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.