பண்டிகை காலங்களில் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிட நாடு முழுவதும், மூவாயிரத்துக்கும் அதிகமான பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் அதிகளவில் முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் உள்ள 365 பொது சுகாதார பிரிவுகளில் சுமார் 3,200 பேருக்கும் அதிகமான பொதுசுகாதார பரிசோதகர்கள் அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் சோதனையிடவுள்ளனர்.