பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்தவாரம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படம் போன்று காலத்திற்கு காலம் பல்வேறு காணொளிகள் சமூகவலைத்தளங்களில் அரசியல் உள்நோக்கங்களுக்காக வெளியிட்டப்படுகின்றது என்று கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) இடம்பெற்ற யாழ் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.