• May 01 2024

அதிகாரத்தை கைப்பற்ற சதி...! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்ஷக்கள்தான் பொறுப்பு- மேர்வின் சில்வா...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 10:24 am
image

Advertisement

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர் மட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

இதனை ஒரு சிறிய விடயமாகவே அவர்கள் கருதியிருந்தனர். ஆனால் இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் இடம்பெற்ற போது மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர்
சென்றிருந்தார்.

ஒன்றரை நாள் கழிந்தே அவருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது சரியானதே. நான் அவரை மதிக்கிறேன். இந்த சம்பவத்துடன், முக்கிய அரசியல்வாதிகளுக்கு பெரிய தொடர்பு இருக்கின்றது. அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்ஷர்கள் தெரிந்தே இந்தச் சதியைச் செய்துள்ளனர்.மற்றவர்கள் இதற்கு துணை இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சனல்4 வெளியிட்ட தகவல்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன. எனினும், இதுவொரு மிகப் பெரிய
பிரச்சினை ஆகும். தவறு செய்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதற்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்ஷவே இதற்கு முழுப் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்ற சதி. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்ஷக்கள்தான் பொறுப்பு- மேர்வின் சில்வா.samugammedia 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்ஷக்களே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர் மட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.இதனை ஒரு சிறிய விடயமாகவே அவர்கள் கருதியிருந்தனர். ஆனால் இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் இடம்பெற்ற போது மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர்சென்றிருந்தார்.ஒன்றரை நாள் கழிந்தே அவருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது சரியானதே. நான் அவரை மதிக்கிறேன். இந்த சம்பவத்துடன், முக்கிய அரசியல்வாதிகளுக்கு பெரிய தொடர்பு இருக்கின்றது. அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்ஷர்கள் தெரிந்தே இந்தச் சதியைச் செய்துள்ளனர்.மற்றவர்கள் இதற்கு துணை இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சனல்4 வெளியிட்ட தகவல்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன. எனினும், இதுவொரு மிகப் பெரியபிரச்சினை ஆகும். தவறு செய்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்ஷவே இதற்கு முழுப் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement