தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் அருகே தேவிபட்டணத்தில் இவ்வாறு இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டுவரப்பட்ட 450 கிலோ பூச்சி கொல்லி மருத்துகள், 125 அழகுசாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.