• May 18 2024

இலங்கையில் இந்த வருடத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு! ஆய்வில் வெளியான தகவல்

Chithra / Dec 29th 2022, 7:58 am
image

Advertisement

இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

37% குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 09% சப்ரகமுவ மாகாணத்திலும், 08% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 11 மாதங்களில் மாத்திரம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அத்துகோரலவின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டு வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் 39% பதிவாகியுள்ளன, கொள்ளை சம்பவங்களில் 14% வடமேல் மாகாணத்திலும் தென் மாகாணத்தில் இருந்து.13% கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த வருடத்தில் களனி பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 ஆக உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட பொலிஸ் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தாண்டில் மாத்திரம் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகளை உடைத்து, 2,159 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை 4,336 ஆக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 31,098 குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் 35,434 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கிறது.

2022 இல் நடந்த குற்றங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கிடைத்த தகவல்களின்படி, சுமார் 29,930 கொடூரமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 36% மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 9% சப்ரகமுவ மாகாணத்திலும், 8% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளன.

இந்த வருடத்தில் சொத்து சேதத்திற்கு எதிராக பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 16,317 ஆகும். மேலும், மக்களுக்கு எதிராக 5,964 குற்றங்கள் பதிவாகியுள்ளன என பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் 10 மற்றும் 11 மாதங்களுக்கு இடையில் 1,466 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 39% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த 11 மாதங்களில் 497 கொலைகள் பதிவாகியுள்ளன, அதில் 49%, அதாவது 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களால் நடந்துள்ளன, என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு ஆய்வில் வெளியான தகவல் இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.37% குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 09% சப்ரகமுவ மாகாணத்திலும், 08% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன.கடந்த 11 மாதங்களில் மாத்திரம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பேராசிரியர் அத்துகோரலவின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டு வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் 39% பதிவாகியுள்ளன, கொள்ளை சம்பவங்களில் 14% வடமேல் மாகாணத்திலும் தென் மாகாணத்தில் இருந்து.13% கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.இந்த வருடத்தில் களனி பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 ஆக உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட பொலிஸ் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளன.நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தாண்டில் மாத்திரம் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகளை உடைத்து, 2,159 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை 4,336 ஆக அதிகரித்துள்ளது.2020 ஆம் ஆண்டில் 31,098 குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் 35,434 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கிறது.2022 இல் நடந்த குற்றங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கிடைத்த தகவல்களின்படி, சுமார் 29,930 கொடூரமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 36% மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 9% சப்ரகமுவ மாகாணத்திலும், 8% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளன.இந்த வருடத்தில் சொத்து சேதத்திற்கு எதிராக பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 16,317 ஆகும். மேலும், மக்களுக்கு எதிராக 5,964 குற்றங்கள் பதிவாகியுள்ளன என பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார்.2022 ஆம் ஆண்டின் முதல் 10 மற்றும் 11 மாதங்களுக்கு இடையில் 1,466 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 39% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த 11 மாதங்களில் 497 கொலைகள் பதிவாகியுள்ளன, அதில் 49%, அதாவது 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களால் நடந்துள்ளன, என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement