• May 18 2024

புதிய தொழில் சட்ட சீர்திருத்ததிற்கு இ.தொ.கா முன்மொழிவுகளை வழங்கும் - பாரத் அருள்சாமி தெரிவிப்பு! samugammedia

Tamil nila / May 7th 2023, 4:28 pm
image

Advertisement

புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான  அறிவு திறன் பொது மன்றத்தின் முதலாவது அமர்வு தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காணவும், டிஜிட்டல் தொழிலாளர்  உலகத்திற்கு ஏற்றவகையில் தொழில் சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்காகவும் இவ் அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி கலந்துக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எமது பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் பாராளுமன்றத்திலும், குழுநிலை கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். அந்த வகையில் தொழில் அமைச்சர் மேற்கொண்டு உள்ள இம் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.

அந்தவகையில் இலங்கை சட்ட ஏற்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் வெறுமனே பதினாறு சட்டங்களே பயன்பாட்டில் உள்ளன. வேலைத்தள பாதுகாப்பு கட்டளை சட்டம் போன்றவை காலாவதி ஆகியுள்ளன. ஆகவே சட்ட சீர்திருத்தம் இன்றி அமையாத காரணியாக உள்ள போதிலும் இச் சீர்திருத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காததாகவும் அமைய வேண்டும்.

ஆண்டொன்றிற்கு 316 பில்லியன் ரூபா வருமானத்தினை ஈட்டி தரும் பெருத்தோட்ட தொழித்துறை அதன் தொழிலார்களுக்கு ஏற்ற உரிமைகளையும் தொழில் பாதுகாப்பையும் வழங்குகின்றனவா என்பது கேள்விக்குறியகை உள்ளது. அண்மையில் உலக வங்கி அறிக்கையின் படி பெருத்தோட்ட பகுதிகளில் ஏழ்மை வீதம் 50% ஆல் அதிகரித்துள்ளது. 

இன்று இத் தொழில்துறையின் தொழில் புரியும் தொழிலார்களின் வீழ்ச்சி 60% ஆக காணப்படுகிறது. இதன் அடிப்படையை உற்று நோக்குகையில் தொழிலாளர்கள் பல சுரண்டல்களுக்கும், உரிமைகள் மீறப்படுவதும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமையே முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.

மேலும் தொழிலாளர்களும், தொழிற்சங்களும் தொழில் திணைக்களத்தின் மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் பொறிமுறை நலிவுற்றுள்ளது எனவே தொழில் திணைக்களத்தினை நாடும் தொழிலாளர்கள் இறுதியில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடுகின்றனர். தீர்வு காணும் முறைமை மற்றும் அதற்கான கட்டமைப்பு காணப்படினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நீதியை பெற்றுக்கொள்ளுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.

அவுட்குரோவர் அல்லது வெளிமுறை கொழுந்து பறித்தல் முறைமை, தொழிலாளர்களுக்கு நன்மை பயர்ப்பதாக காட்டப்பட்டபோதிலும் முறையான சட்ட ஏற்றப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படாமையின் காரணமாக தொழிலார்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதுடன் மற்றும் பல உழைப்பு சுரண்டல்களுக்கு ஆளாகுகின்றார்கள். முதலாளிமார் சம்மெளனம் இதற்கு பல விளக்கங்களை வழங்கினாலும் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபா நிதி ஊழியர் நம்பிக்கை நிதி தொழில் பாதுகாப்பு என்ற பல சட்ட பாதுகாப்பை இழக்கின்றனர். 

இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களும் நானும் முதலாளிமார் சம்மெளனத்திடம் ஒரு சீரான முறைமை திட்டத்தை கேட்டு வந்த போதிலும் அவர்களின் அசமந்த போக்கில் இன்று பல தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கபட்டுள்ளன.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் உற்பத்தி துறை அதிகரிக்க பங்களிக்கும் ஒரு தொழிற்சங்கமாகும். ஆனால் எக்காரணத்திலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவின்  காரணமாக தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். முறைசாரா தொழில்துறையினுள் பிரவேசிக்கும் இத் தொழிலாளர்கள்  எவ்வித சட்ட ஏற்பாடுகளுக்குள்ளும்  உள்வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது  வீட்டுப் பணிப்பெண்களாக செல்பவர்கள்  தனியார் தொழில் துறைக்கு செல்பவர்கள் மற்றும் பகுதிநேர தொழிலாளர்கள்  என்போருக்கு சட்ட ஏற்பாடுகளில் உள்ள  பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. இவர்களே பல உழைப்பு சுரண்டல்களுக்கும்  உரிமை மீறல்களுக்கும் ஆளாகின்றனர்.

மேலும், சட்ட சீர்திருத்தங்களுக்கு செல்லும் முன்னர்  இன்று பல தொழிலாளர்கள் தொழில் திணைக்களத்தின் ஊடாக  பெற்றுக் கொள்ளும் சேவைகளில் பல இடங்களில் சந்திக்கின்றனர் விசேடமாக அவர்களுடைய ஊழியர் சேமலபா நிதியை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் ஒரு உதாரணமாகும். 

எனவே நாம் முன்னோக்கி இவ்வாறான தாமதங்கள் எமது வளர்ச்சிப் பாதையை எனவே தொழில் அமைச்சர் அவர்கள்  இதற்கு விசேட கவனத்தை செலுத்த வேண்டும் என  தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு பெருந்தோட்ட தொழில்துறையில்  ஏறத்தாழ 54 வீதம் பெண்களாக காணப்பட்ட போதிலும்  அவர்களைப் பாதுகாக்கும் சட்டமூலங்கள்  மிகக் குறைவாகவே உள்ளன  எனவே சர்வதேச தொழிலாளர் 190 வது சரத்து உள்வாங்கப்படுவதுடன்  அவர்களின் உரிமை மற்றும் நலன்புரி சார்ந்த விடயங்களிலும்  சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்

அண்மையில் நான்கு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது  துர்பாக்கியமாக இறந்தமை  நாம் அனைவரும் அறிந்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பீடம் தொழிலாளர்களுக்கு தேவையான நஷ்ட ஈட்டை நமது பலத்தை பயன்படுத்தி பெற்றுக் கொடுத்தது. எனவே நவீன மயமாக்கல் என்னும் தொனிப் பொருள் பேசப்படும் போது அதன் பாதுகாப்பும் பேசப்பட வேண்டும்.

எனவே மேலும் இச்சட்ட சீர்திருத்தத்திற்கான  அனைத்து முன்மொழிவுகளையும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  வழங்கும் எனவும் தொழிலாளர்களுக்கும்  தொழில் வழங்குனர்களுக்கும்  பயனளிக்கும் விதத்தில் தொழில் சட்டம் உருவாக்க  நாம் என்றும் உறுதுணையாக இருப்போம் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் வழங்குநர்கள்  தொழிலாளர் சட்ட திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிகழ்வில் தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இலங்கையிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதானி சிம்ரின் சிங்கும் கலந்துகொண்டார்.


புதிய தொழில் சட்ட சீர்திருத்ததிற்கு இ.தொ.கா முன்மொழிவுகளை வழங்கும் - பாரத் அருள்சாமி தெரிவிப்பு samugammedia புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான  அறிவு திறன் பொது மன்றத்தின் முதலாவது அமர்வு தொழில் அமைச்சில் இடம்பெற்றது.தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காணவும், டிஜிட்டல் தொழிலாளர்  உலகத்திற்கு ஏற்றவகையில் தொழில் சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்காகவும் இவ் அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி கலந்துக்கொண்டார்.இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எமது பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் பாராளுமன்றத்திலும், குழுநிலை கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். அந்த வகையில் தொழில் அமைச்சர் மேற்கொண்டு உள்ள இம் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.அந்தவகையில் இலங்கை சட்ட ஏற்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் வெறுமனே பதினாறு சட்டங்களே பயன்பாட்டில் உள்ளன. வேலைத்தள பாதுகாப்பு கட்டளை சட்டம் போன்றவை காலாவதி ஆகியுள்ளன. ஆகவே சட்ட சீர்திருத்தம் இன்றி அமையாத காரணியாக உள்ள போதிலும் இச் சீர்திருத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காததாகவும் அமைய வேண்டும்.ஆண்டொன்றிற்கு 316 பில்லியன் ரூபா வருமானத்தினை ஈட்டி தரும் பெருத்தோட்ட தொழித்துறை அதன் தொழிலார்களுக்கு ஏற்ற உரிமைகளையும் தொழில் பாதுகாப்பையும் வழங்குகின்றனவா என்பது கேள்விக்குறியகை உள்ளது. அண்மையில் உலக வங்கி அறிக்கையின் படி பெருத்தோட்ட பகுதிகளில் ஏழ்மை வீதம் 50% ஆல் அதிகரித்துள்ளது. இன்று இத் தொழில்துறையின் தொழில் புரியும் தொழிலார்களின் வீழ்ச்சி 60% ஆக காணப்படுகிறது. இதன் அடிப்படையை உற்று நோக்குகையில் தொழிலாளர்கள் பல சுரண்டல்களுக்கும், உரிமைகள் மீறப்படுவதும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமையே முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.மேலும் தொழிலாளர்களும், தொழிற்சங்களும் தொழில் திணைக்களத்தின் மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணும் பொறிமுறை நலிவுற்றுள்ளது எனவே தொழில் திணைக்களத்தினை நாடும் தொழிலாளர்கள் இறுதியில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடுகின்றனர். தீர்வு காணும் முறைமை மற்றும் அதற்கான கட்டமைப்பு காணப்படினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நீதியை பெற்றுக்கொள்ளுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.அவுட்குரோவர் அல்லது வெளிமுறை கொழுந்து பறித்தல் முறைமை, தொழிலாளர்களுக்கு நன்மை பயர்ப்பதாக காட்டப்பட்டபோதிலும் முறையான சட்ட ஏற்றப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படாமையின் காரணமாக தொழிலார்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதுடன் மற்றும் பல உழைப்பு சுரண்டல்களுக்கு ஆளாகுகின்றார்கள். முதலாளிமார் சம்மெளனம் இதற்கு பல விளக்கங்களை வழங்கினாலும் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபா நிதி ஊழியர் நம்பிக்கை நிதி தொழில் பாதுகாப்பு என்ற பல சட்ட பாதுகாப்பை இழக்கின்றனர். இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களும் நானும் முதலாளிமார் சம்மெளனத்திடம் ஒரு சீரான முறைமை திட்டத்தை கேட்டு வந்த போதிலும் அவர்களின் அசமந்த போக்கில் இன்று பல தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கபட்டுள்ளன.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் உற்பத்தி துறை அதிகரிக்க பங்களிக்கும் ஒரு தொழிற்சங்கமாகும். ஆனால் எக்காரணத்திலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்காது.மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவின்  காரணமாக தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். முறைசாரா தொழில்துறையினுள் பிரவேசிக்கும் இத் தொழிலாளர்கள்  எவ்வித சட்ட ஏற்பாடுகளுக்குள்ளும்  உள்வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது  வீட்டுப் பணிப்பெண்களாக செல்பவர்கள்  தனியார் தொழில் துறைக்கு செல்பவர்கள் மற்றும் பகுதிநேர தொழிலாளர்கள்  என்போருக்கு சட்ட ஏற்பாடுகளில் உள்ள  பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. இவர்களே பல உழைப்பு சுரண்டல்களுக்கும்  உரிமை மீறல்களுக்கும் ஆளாகின்றனர்.மேலும், சட்ட சீர்திருத்தங்களுக்கு செல்லும் முன்னர்  இன்று பல தொழிலாளர்கள் தொழில் திணைக்களத்தின் ஊடாக  பெற்றுக் கொள்ளும் சேவைகளில் பல இடங்களில் சந்திக்கின்றனர் விசேடமாக அவர்களுடைய ஊழியர் சேமலபா நிதியை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் ஒரு உதாரணமாகும். எனவே நாம் முன்னோக்கி இவ்வாறான தாமதங்கள் எமது வளர்ச்சிப் பாதையை எனவே தொழில் அமைச்சர் அவர்கள்  இதற்கு விசேட கவனத்தை செலுத்த வேண்டும் என  தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.அத்தோடு பெருந்தோட்ட தொழில்துறையில்  ஏறத்தாழ 54 வீதம் பெண்களாக காணப்பட்ட போதிலும்  அவர்களைப் பாதுகாக்கும் சட்டமூலங்கள்  மிகக் குறைவாகவே உள்ளன  எனவே சர்வதேச தொழிலாளர் 190 வது சரத்து உள்வாங்கப்படுவதுடன்  அவர்களின் உரிமை மற்றும் நலன்புரி சார்ந்த விடயங்களிலும்  சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்அண்மையில் நான்கு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது  துர்பாக்கியமாக இறந்தமை  நாம் அனைவரும் அறிந்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பீடம் தொழிலாளர்களுக்கு தேவையான நஷ்ட ஈட்டை நமது பலத்தை பயன்படுத்தி பெற்றுக் கொடுத்தது. எனவே நவீன மயமாக்கல் என்னும் தொனிப் பொருள் பேசப்படும் போது அதன் பாதுகாப்பும் பேசப்பட வேண்டும்.எனவே மேலும் இச்சட்ட சீர்திருத்தத்திற்கான  அனைத்து முன்மொழிவுகளையும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  வழங்கும் எனவும் தொழிலாளர்களுக்கும்  தொழில் வழங்குனர்களுக்கும்  பயனளிக்கும் விதத்தில் தொழில் சட்டம் உருவாக்க  நாம் என்றும் உறுதுணையாக இருப்போம் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் வழங்குநர்கள்  தொழிலாளர் சட்ட திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிகழ்வில் தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இலங்கையிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதானி சிம்ரின் சிங்கும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement