புத்தளம் தில்லையடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வதுடைய எல்.ஏ.என் நப்ஸான் என்ற இளைஞர் ஒரு மாதம் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார்.
போதை ஒழிப்பு, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என்ற மூன்று கோரிக்கையை முன்வைத்து பயனத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த பயணத்தை புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஆரம்பித்ததோடு குறித்த இளைஞரை ஊக்குவிக்குமுகமாக புத்தளம் நகரசபை செயலாளர், புத்தளம் வர்த்தக நலன்புறிச் சங்கம், மற்றும் லகூன் இளைஞர் அமைப்பு பிரதேச மக்கள் ஆகியோர் ஒத்துழைப்பினை வழங்கினர்.