அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ்க குணதிலக்க உடலுறவின் போது ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் சுற்று பயணத்தின் போது, யுவதி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஆணுறையை பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட இணக்கம் தெரிவித்த போதும், ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபட்டதாக யுவதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதி தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஓரிரு வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு வழக்கு விசாரணைகள் தொடர்ந்த பின்னணியில், இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது
தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – அதிரடி தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம் samugammedia அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியா – சிட்னி நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.தனுஷ்க குணதிலக்க உடலுறவின் போது ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் சுற்று பயணத்தின் போது, யுவதி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.ஆணுறையை பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட இணக்கம் தெரிவித்த போதும், ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபட்டதாக யுவதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.இதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதி தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.ஓரிரு வாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.இவ்வாறு வழக்கு விசாரணைகள் தொடர்ந்த பின்னணியில், இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது