• May 17 2024

பலத்த பாதுகாப்புடன் வடக்கில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்! samugammedia

Chithra / Apr 9th 2023, 11:10 am
image

Advertisement

இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான  கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை பேராலயத்தில் புனித உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலி யாழ். மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையும். மறைமாவட்ட ஆயரும் ஆகிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை  ஒப்புக்கொடுத்தார்.

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தினை பெற்றுச்சென்றனர்.


---

உயிர்த்த ஞாயிறு  திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.


---

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. 

கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர்.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.

உயிர்ப்பின் அடையாளமாக அதிகாலை மெழுகுவர்த்தி ஏந்தியவாறு சாட்சி பவனி இடம்பெற்றதுடன் திருப்பலியை வணக்கத்துக்குரிய கத்தரின் ஒப்புக்கொடுத்தார்.

இதேவேளை, கிளிநொச்சி அங்கிலிகன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது.


பலத்த பாதுகாப்புடன் வடக்கில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் samugammedia இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர்.இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான  கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை பேராலயத்தில் புனித உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது.இவ் கூட்டுத்திருப்பலி யாழ். மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையும். மறைமாவட்ட ஆயரும் ஆகிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை  ஒப்புக்கொடுத்தார்.இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தினை பெற்றுச்சென்றனர்.---உயிர்த்த ஞாயிறு  திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.---கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர்.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.உயிர்ப்பின் அடையாளமாக அதிகாலை மெழுகுவர்த்தி ஏந்தியவாறு சாட்சி பவனி இடம்பெற்றதுடன் திருப்பலியை வணக்கத்துக்குரிய கத்தரின் ஒப்புக்கொடுத்தார்.இதேவேளை, கிளிநொச்சி அங்கிலிகன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement