இலங்கையில் தற்போது முட்டை,பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் இராணுவம், பொலிஸ் திணைக்களத்தின் வாகனங்களை தமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதற்கு இராணுவம்,பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வாகனங்களை எமக்கு வழங்கினால் 49 ரூபாய்க்குப் பாணையும், முட்டையை 55 ரூபாய்க்குக் குறைவான விலையிலும் வழங்க எம்மால் முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.