புத்தளம் அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 20ற்கும் அதிகமான யானைகள் நேற்று மாலை நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
அவ்வழியால் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி அரிய வகைக் காட்சியை கண்டுகழித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது தெரிவிக்கின்றனர்.