• May 19 2024

ஈ.பி.டி.பி அமைப்பாளர் காட்டு யானை தாக்கி மரணம்..! samugammedia

Chithra / Jun 1st 2023, 1:05 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சர் எம். சி. கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் காட்டு யானை தாக்கியதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள வயலுக்கு இரவுக் காவல் கடமைக்கு சென்றிருந்த நிலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவரின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஓய்வு நிலை விவசாய போதனாசிரியரான கங்காதரன் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக பொதுநல செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈ.பி.டி.பி அமைப்பாளர் காட்டு யானை தாக்கி மரணம். samugammedia மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சர் எம். சி. கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் காட்டு யானை தாக்கியதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள வயலுக்கு இரவுக் காவல் கடமைக்கு சென்றிருந்த நிலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.ஓய்வு நிலை விவசாய போதனாசிரியரான கங்காதரன் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக பொதுநல செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement