• May 07 2024

வீதியில் கிடந்த பல இலட்சம் பெறுமதியான தங்கம்...! பாடசாலை மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல்...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 11:50 am
image

Advertisement

மீகலாவ, மகாவலி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர், மீகலாவ நகர வீதியொன்றில் ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணப்பையொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

இந்த பெறுமதியான பொருட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவிகளால்  கண்டெடுக்கப்பட்டு மெகலேவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீகலாவ மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் திசூரி யுவனிகா தர்மபால மற்றும் சந்துனி நிமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவர்களினால் இந்த உன்னத செயலை செய்துள்ளதுடன், மீகலாவ பொலிஸார் தங்கப் பொருட்கள் மற்றும் பணப்பையை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

சமூக விழுமியங்கள் அழிந்து வரும் சமூகத்தில் இவ்வாறானதொரு உன்னத செயலை செய்ய தூண்டிய இரு மாணவர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து மீகலாவ பொலிஸார் பாடசாலை அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் கிடந்த பல இலட்சம் பெறுமதியான தங்கம். பாடசாலை மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல்.samugammedia மீகலாவ, மகாவலி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர், மீகலாவ நகர வீதியொன்றில் ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணப்பையொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.இந்த பெறுமதியான பொருட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவிகளால்  கண்டெடுக்கப்பட்டு மெகலேவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மீகலாவ மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் திசூரி யுவனிகா தர்மபால மற்றும் சந்துனி நிமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவர்களினால் இந்த உன்னத செயலை செய்துள்ளதுடன், மீகலாவ பொலிஸார் தங்கப் பொருட்கள் மற்றும் பணப்பையை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.சமூக விழுமியங்கள் அழிந்து வரும் சமூகத்தில் இவ்வாறானதொரு உன்னத செயலை செய்ய தூண்டிய இரு மாணவர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து மீகலாவ பொலிஸார் பாடசாலை அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement