• Sep 08 2024

யாழ். அரச அதிபராக சிவபாலசுந்தரன் கடமைகளை பொறுப்பேற்றார்!

Chithra / Jan 18th 2023, 10:27 am
image

Advertisement

யாழ். மாவட்ட புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை (16) அமைச்சரவை வழங்கியது.

இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை நேற்று பெற்றுக் கொண்டார்.

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.


யாழ். அரச அதிபராக சிவபாலசுந்தரன் கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை (16) அமைச்சரவை வழங்கியது.இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை நேற்று பெற்றுக் கொண்டார்.இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement