மூதூரில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை - 2021 இல் சித்தியடைந்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வைபவம் மூதூரில் இன்று (17) இடம் பெற்றது.
திருகோணமலை,மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் லாபீரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டார்.
இதில் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் எம். எம். ஏ. அரூஸ், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கணி, மூதூர் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான ஹரீஸ் ஆசிரியர், பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன், மூதூர் மத்திய கல்லூரி அதிபர் முஹீர், அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் மௌலவி தஸ்ரிக் பொதுஜன பெரமுன கட்சியின் மூதூர் அமைப்பாளர் முபாறக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.