• Apr 26 2024

கிரீஸில் பயங்கரம்: இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 26பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 10:26 am
image

Advertisement

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 

கிரீஸ்  நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று  350 பயணிகளுடன் ரயில் ஒன்று  சென்றுகொண்டிருந்தது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தவேளை  அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் ஒன்று  மோதியதில்  பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

 இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதால் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 85 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை  மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.


கிரீஸில் பயங்கரம்: இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 26பேர் பரிதாபகரமாக உயிரிழப்புSamugamMedia இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.  கிரீஸ்  நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று  350 பயணிகளுடன் ரயில் ஒன்று  சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தவேளை  அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் ஒன்று  மோதியதில்  பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதால் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 85 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை  மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement