கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், குடிமக்கள் ஆகியோரின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.
சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி எஸ்.எம்.மில் பதிவிட்ட பல இளைஞர்களுக்கு TID சமீபத்தில் சம்மன் அனுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதியே தப்பிச் செல்லும் நிலை என்றால் நாட்டு மக்களின் நிலை. சாணக்கியன் எம்.பி கண்டனம். samugammedia கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், குடிமக்கள் ஆகியோரின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி எஸ்.எம்.மில் பதிவிட்ட பல இளைஞர்களுக்கு TID சமீபத்தில் சம்மன் அனுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.