• May 09 2024

தமிழ் தேசிய கூட்டைப்புடனான பிரிவு நிரந்தரம் அல்ல – மீண்டும் இணைவோம் - கலையரசன் உறுதி!

Tamil nila / Feb 1st 2023, 11:29 am
image

Advertisement

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்களின் ஆணை உள்ளதென்பதை மக்கள் நிரூபிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே த.கலையரசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




பலம் மிக்க கட்சியை பலப்படுத்தவில்லையென்றால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று தமிழ் மக்களின் இருப்பு கல்முனை மாநகரத்தின் கேள்விக்குறியாக இருப்பதாகவும் நாளுக்கு நாள் பலமிழக்கப்படுகின்ற ஒரு இனமாகவே தமிழினம் உள்ளதாக த.கலையரசன் குறிப்பிட்டிருந்தார்.



தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கின்ற விடயங்களுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது கட்சியைச் சிதைப்பதற்காக மாற்றுக் கட்சியினருடன் சேர்ந்து எமது கட்சியோடு பயணித்தவர்களும் தற்போது பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக த.கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு நிரந்தரமானது அல்ல என்றும் எதிர்காலத்தில் தாங்கள் அதே ஒற்றமையுடன் செயற்படுவோம் என்று த.கலையரசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டைப்புடனான பிரிவு நிரந்தரம் அல்ல – மீண்டும் இணைவோம் - கலையரசன் உறுதி தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்களின் ஆணை உள்ளதென்பதை மக்கள் நிரூபிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே த.கலையரசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பலம் மிக்க கட்சியை பலப்படுத்தவில்லையென்றால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று தமிழ் மக்களின் இருப்பு கல்முனை மாநகரத்தின் கேள்விக்குறியாக இருப்பதாகவும் நாளுக்கு நாள் பலமிழக்கப்படுகின்ற ஒரு இனமாகவே தமிழினம் உள்ளதாக த.கலையரசன் குறிப்பிட்டிருந்தார்.தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கின்ற விடயங்களுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.எமது கட்சியைச் சிதைப்பதற்காக மாற்றுக் கட்சியினருடன் சேர்ந்து எமது கட்சியோடு பயணித்தவர்களும் தற்போது பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக த.கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு நிரந்தரமானது அல்ல என்றும் எதிர்காலத்தில் தாங்கள் அதே ஒற்றமையுடன் செயற்படுவோம் என்று த.கலையரசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement