தேசிய தலைவருடைய பெயரை வைத்து இவ்வாறான பல கருத்துக்கள் பகிரப்பட்டு கொண்டு வருவதாகவும் தலைவர் உயிரோடு இருந்தால் தலைவர் நேரடியாக வந்து மக்களுக்கு தெரிவிப்பார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தான கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தலைவரை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்வதற்கு தற்போது முயற்சி எடுக்கின்றனர்.சமகாலத்திலே இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வந்து நின்று பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை எரித்துவிட்டு மறுநாள் காலையிலே அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார்கள்.
நெடுமாறன் ஊடாக இந்த செய்தி வருவதாக இருந்தால் நெடுமாறனூடாக இந்த செய்தி வருவது ஒரு சந்தேகம் இருக்கின்றது. நான் நெடுமாறன் அவர்களை பிழையாக சொல்லவில்லை ஆனால் தலைவர் அவர்களுடைய விடயங்கள் வருவதென்றால் ஒரு அதிரடியாகத்தான் அந்த விடயங்கள் இடம் பெறும் என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
பிரபாகரன் இருந்தால் அவருடைய விடயங்கள் வெளி வருவதென்றால் அது ஒரு அதிரடியாகத்தான் இருக்கும்-சாணக்கியன் எம்.பிSamugamMedia தேசிய தலைவருடைய பெயரை வைத்து இவ்வாறான பல கருத்துக்கள் பகிரப்பட்டு கொண்டு வருவதாகவும் தலைவர் உயிரோடு இருந்தால் தலைவர் நேரடியாக வந்து மக்களுக்கு தெரிவிப்பார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தான கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.தலைவரை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்வதற்கு தற்போது முயற்சி எடுக்கின்றனர்.சமகாலத்திலே இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வந்து நின்று பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை எரித்துவிட்டு மறுநாள் காலையிலே அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார்கள்.நெடுமாறன் ஊடாக இந்த செய்தி வருவதாக இருந்தால் நெடுமாறனூடாக இந்த செய்தி வருவது ஒரு சந்தேகம் இருக்கின்றது. நான் நெடுமாறன் அவர்களை பிழையாக சொல்லவில்லை ஆனால் தலைவர் அவர்களுடைய விடயங்கள் வருவதென்றால் ஒரு அதிரடியாகத்தான் அந்த விடயங்கள் இடம் பெறும் என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்தார்.