• May 18 2024

உங்களிற்கு என்ன என்றாலும் செய்வேன்..எங்களை காப்பாற்றுங்கள்: சிறுமியின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்!

Sharmi / Feb 9th 2023, 2:25 pm
image

Advertisement

சிரியாவின் வடபகுதியில் ஏற்பட்ட  பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டினுடைய  கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் அகப்பட்ட  இரு சகோதரர்கள் 36 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் அகப்பட்டவர்களினை மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்களிற்கு என்னவேண்டும் என்றாலும் செய்வேன் எனவும்,  வீட்டில் வேலை வேலை செய்து தருவேன் எனவும்  சிறுமி தன்னை காப்பாற்ற முயலும் நபரிடம் தெரிவிக்கின்றார்.

"இல்லை அப்படி சொல்லவேண்டாம்" என மீட்புபணியாளர் தெரிவிக்கின்றார்.

சிறுமியின் பெயர் மரியம்-எஞ்சியிருக்கின்ற கட்டிலில் தனது இளைய சகோதரனுடன் காணப்படும் மரியம் சகோதரனின் தலையை மெதுவாக வருடுகின்றார்.

தனது கையால் சகோதரனின் முகத்தை மூடி சகோதரனின் முகத்தில் இடிபாடுகளின் தூசி படுவதை தடுக்கின்றார். இவ்வாறான காட்சிகள் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.

தாங்கள்( மனைவி - மூன்று பிள்ளைகள்) உறங்கிக்கொண்டிருந்தவேளை அதிகாலையில் பூகம்பம் தாக்கியதாக  தந்தை தெரிவித்துள்ளார்.

 நிலம் அதிர்வதை உணர்ந்தாத்தாவும்,கட்டிடத்தின் பகுதிகள் எங்கள் தலைமீது விழத்தொடங்கியதாகவும், அத்தோடு  இரண்டு நாட்கள் இடிபாடுகளிற்குள் அகப்பட்டு கஷ்டப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

எவரும் அனுபவிக்க கூடாத வேதனையை  அனுபவித்தோம் என குறிப்பிட்டவர் இடிபாட்டிற்குள் சிக்குண்டிருந்த படி  உரத்த குரலில் குரான் வாசித்தோம்- எங்களை யாராவது கண்டுபிடிப்பார்கள் என நினைத்தோம் எனவும்  தெரிவித்துள்ளார்.

எங்கள் குரல்களை மக்கள் கேட்டதனால் எங்களை காப்பாற்றினார்கள்  கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம். மேலும்  அனைவரும் உயிருடன் இருக்கின்றோம். காப்பாற்றியவர்களிற்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு சிறுவர்களையும்  போர்வையில் சுற்றி வெளியே பாதுகாப்பாக மீட்பு பணியாளர்கள் கொண்டுவருவதைக் கண்டு  மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன.
 

மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் குளிரின் மத்தியில் மக்களை மீட்பது குறித்த நம்பிக்கைகள் நிமிடத்திற்குநிமிடம் குறைவடைவதாகவும்,முற்றிலும் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து உயிர்தப்பியவர்கள் கூட கடுங்குளிரை சமாளிக்க முடியாது நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





உங்களிற்கு என்ன என்றாலும் செய்வேன்.எங்களை காப்பாற்றுங்கள்: சிறுமியின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் சிரியாவின் வடபகுதியில் ஏற்பட்ட  பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டினுடைய  கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் அகப்பட்ட  இரு சகோதரர்கள் 36 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் அகப்பட்டவர்களினை மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்களிற்கு என்னவேண்டும் என்றாலும் செய்வேன் எனவும்,  வீட்டில் வேலை வேலை செய்து தருவேன் எனவும்  சிறுமி தன்னை காப்பாற்ற முயலும் நபரிடம் தெரிவிக்கின்றார்."இல்லை அப்படி சொல்லவேண்டாம்" என மீட்புபணியாளர் தெரிவிக்கின்றார்.சிறுமியின் பெயர் மரியம்-எஞ்சியிருக்கின்ற கட்டிலில் தனது இளைய சகோதரனுடன் காணப்படும் மரியம் சகோதரனின் தலையை மெதுவாக வருடுகின்றார்.தனது கையால் சகோதரனின் முகத்தை மூடி சகோதரனின் முகத்தில் இடிபாடுகளின் தூசி படுவதை தடுக்கின்றார். இவ்வாறான காட்சிகள் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. தாங்கள்( மனைவி - மூன்று பிள்ளைகள்) உறங்கிக்கொண்டிருந்தவேளை அதிகாலையில் பூகம்பம் தாக்கியதாக  தந்தை தெரிவித்துள்ளார். நிலம் அதிர்வதை உணர்ந்தாத்தாவும்,கட்டிடத்தின் பகுதிகள் எங்கள் தலைமீது விழத்தொடங்கியதாகவும், அத்தோடு  இரண்டு நாட்கள் இடிபாடுகளிற்குள் அகப்பட்டு கஷ்டப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.எவரும் அனுபவிக்க கூடாத வேதனையை  அனுபவித்தோம் என குறிப்பிட்டவர் இடிபாட்டிற்குள் சிக்குண்டிருந்த படி  உரத்த குரலில் குரான் வாசித்தோம்- எங்களை யாராவது கண்டுபிடிப்பார்கள் என நினைத்தோம் எனவும்  தெரிவித்துள்ளார்.எங்கள் குரல்களை மக்கள் கேட்டதனால் எங்களை காப்பாற்றினார்கள்  கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம். மேலும்  அனைவரும் உயிருடன் இருக்கின்றோம். காப்பாற்றியவர்களிற்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இரு சிறுவர்களையும்  போர்வையில் சுற்றி வெளியே பாதுகாப்பாக மீட்பு பணியாளர்கள் கொண்டுவருவதைக் கண்டு  மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடும் குளிரின் மத்தியில் மக்களை மீட்பது குறித்த நம்பிக்கைகள் நிமிடத்திற்குநிமிடம் குறைவடைவதாகவும்,முற்றிலும் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து உயிர்தப்பியவர்கள் கூட கடுங்குளிரை சமாளிக்க முடியாது நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement