• May 18 2024

பெரியநீலாவணையில், கேரளா கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 3:48 pm
image

Advertisement

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புதன்கிழமை(19) மாலை  சந்தேக நபர் கைதானார்.

பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய பெருங் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமான  டி. தினேஷ்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமான நபரை கைது செய்தனர்.


இதன் போது சந்தேக நபர் வசம் இருந்து   860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவ்வாறு  கைது செய்யப்பட்ட 35 வயதுடைய  சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநீலாவணையில், கேரளா கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது samugammedia கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புதன்கிழமை(19) மாலை  சந்தேக நபர் கைதானார்.பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய பெருங் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமான  டி. தினேஷ்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமான நபரை கைது செய்தனர்.இதன் போது சந்தேக நபர் வசம் இருந்து   860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவ்வாறு  கைது செய்யப்பட்ட 35 வயதுடைய  சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement