• May 18 2024

பொலன்னறுவையில், ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

Tamil nila / Dec 14th 2022, 8:14 pm
image

Advertisement

பொலன்னறுவை-ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்குறாகொட பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வாளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு மைக்ரோ பிஸ்டல், இரண்டு நாட்டுத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

3 MIC இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப் படையினருடன் சேர்ந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே வீடொன்றிலிருந்து குறித்த சந்தேக நபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்காக சான்றுப் பொருட்களுடன் ஹிங்குறாகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹிங்குறாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலன்னறுவையில், ஆயுதங்களுடன் ஒருவர் கைது பொலன்னறுவை-ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்குறாகொட பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வாளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு மைக்ரோ பிஸ்டல், இரண்டு நாட்டுத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.3 MIC இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குகிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப் படையினருடன் சேர்ந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே வீடொன்றிலிருந்து குறித்த சந்தேக நபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்காக சான்றுப் பொருட்களுடன் ஹிங்குறாகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஹிங்குறாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement