திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.கவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்றையதினம் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் பூக்களால் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்கள் கொண்டு உதயசூரியன் வரையப்பட்டுள்ள நிலையில் 'உதயத்தை வரவேற்போம்' என்ற வார்த்தையும் மலர்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.