• Apr 28 2024

யாழில், மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப் பொருள் கண்டுபிடிப்பு!

Tamil nila / Dec 19th 2022, 10:29 am
image

Advertisement

யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளுடன்  யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வாளர்களால்  ஒருவர் கைது!



பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்


கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்,கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில், மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப் பொருள் கண்டுபிடிப்பு யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளுடன்  யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வாளர்களால்  ஒருவர் கைதுபாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்,கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement