இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்கூர் - மெஹ்லான் சௌக் அருகே இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது, கார் ஒன்று டிரக் மீது நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் பயணித்தர்கள் அனைவரும் புனித யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்குண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஒரு லொரியை முந்திச் செல்ல முன்பட்ட போது, எதிரே வந்த மற்றொரு டிரக் மீது கார் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பஞ்சாப் பொலிஸார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பஞ்சாப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா - மெஹ்லான் சௌக் அருகே கோர விபத்து : சிறு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு samugammedia இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்கூர் - மெஹ்லான் சௌக் அருகே இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தானது, கார் ஒன்று டிரக் மீது நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காரில் பயணித்தர்கள் அனைவரும் புனித யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்குண்டதாகவும் கூறப்படுகிறது.மேலும், ஒரு லொரியை முந்திச் செல்ல முன்பட்ட போது, எதிரே வந்த மற்றொரு டிரக் மீது கார் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பஞ்சாப் பொலிஸார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பஞ்சாப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.