• Jun 20 2025

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்; இலங்கை செவிலியர் காயம்..!

Sharmi / Jun 19th 2025, 11:49 am
image

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 7ஆவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. 

இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில்,இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.


தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்; இலங்கை செவிலியர் காயம். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 7ஆவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில்,இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தாக்குதலில் இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement