திருகோணமலை - நிலாவெளி செல்லும் வீதியில் வீதியோர சாப்பாட்டு கடை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த வீதியோர சாப்பாட்டு கடையில் 'பணமின்றி பசியென்று வரும் ஏழைக்கு என்னிடம் உணவுண்டு.' என்ற வாசகம் எழுதப்பட்டு அம்மா ஒருவர் உணவு வழங்கி வருகின்றார்.
இப்படியும் நல்ல இதயங்களா.. இவர்கள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழ வேண்டும் என இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.