• Sep 08 2024

யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு...!samugammedia

Sharmi / Oct 21st 2023, 12:50 pm
image

Advertisement

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களுக்கு இன்றையதினம் யாழில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று(21) காலை நடைபெற்றது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருகின்ற வகையில் அவர்களின் 36 ஆம் ஆண்டு  நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது உயிர்நீத்த உறவுகளின் உருவப் படத்திற்கு பொதுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி  நினைவுகூர்ந்தனர்.

இவ் நினைவேந்தலில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு.samugammedia இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களுக்கு இன்றையதினம் யாழில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று(21) காலை நடைபெற்றது.யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருகின்ற வகையில் அவர்களின் 36 ஆம் ஆண்டு  நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது உயிர்நீத்த உறவுகளின் உருவப் படத்திற்கு பொதுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி  நினைவுகூர்ந்தனர்.இவ் நினைவேந்தலில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement