தியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதனார்மடத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் பயன்தரு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.
சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சம நேரத்தில் தியாக தீபம் திலிபனின் அகிம்சை பயணத்தின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் ச.அபிரக்ஷன்,சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.