• Jun 26 2024

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம்!

Chithra / Apr 1st 2024, 4:08 pm
image

Advertisement

 

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (1) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ( 01) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம்  லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (1) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 625 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 248 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பில் இன்று ( 01) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement