மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் சாலை ஓரமாக தேயிலை செடிகளின் பகுதியில் கட்டப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவால் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கபட்டது.
சிறுத்தை வலையில் சிக்கிய பகுதிக்கு நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்று உயிரிழந்த நிலையில் சிறுத்தையை மீட்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தையை பேராதெனிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.