• May 18 2024

நெடுந்தீவு கூட்டுப்படுகொலை...! உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மக்கள் அஞ்சலி...!samugammedia

Sharmi / Apr 24th 2023, 3:39 pm
image

Advertisement

நெடுந்தீவு கூட்டுப்படுகொலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களின் அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் கொக்குவில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை(22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



இவ்வாறானதொரு நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவரை சனிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் நேற்று(23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


இந்நிலையில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள  இல்லத்தில் நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவியான  பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகிய  இருவரின் சடலங்கள் இன்று(24)  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நெடுந்தீவு கூட்டுப்படுகொலை. உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மக்கள் அஞ்சலி.samugammedia நெடுந்தீவு கூட்டுப்படுகொலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களின் அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் கொக்குவில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை(22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவ்வாறானதொரு நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவரை சனிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்தனர்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் நேற்று(23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.இந்நிலையில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள  இல்லத்தில் நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவியான  பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகிய  இருவரின் சடலங்கள் இன்று(24)  மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement