• May 09 2024

போதைப்பொருள் கொடுத்து 5 இளம் பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிரமுகர் கைது..! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 7:48 pm
image

Advertisement

சிட்னியில் போதைப்பொருள் கொடுத்து 5 கொரிய இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் சசெய்த பாஜக பிரமுகர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’யின் முன்னாள் தலைவரான பாலேஷ் தன்கர் (43) ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 

வேலைவாய்ப்பு கொடுப்பதாக விளம்பரங்கள் செய்து தனது வலையில் 5 கொரிய பெண்களை சிக்க வைத்துள்ளார். 

பின்னர், அவர்களிடம் நெருக்கமாகி  போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், அபடுக்கை அறையில் கடிகாரத்தில் கேமராவை மறைத்து வைத்தும்  வீடியோ எடுத்துள்ளார்.

5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தன்கர், 6 வது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட அந்த பெண் பொலிசாரிடம்  புகாரளிக்க அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் பொலிசார்  தன்கரை கைது செய்துள்ளனர். 

பொலிசாரின் விசாரணையில் பாலியல் சீண்டல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், பல வீடியோக்கள் சிக்கியுள்ளது. 

இதனால், சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த ஆண்டு இறுதியில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும் சிட்னி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கொடுத்து 5 இளம் பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிரமுகர் கைது. samugammedia சிட்னியில் போதைப்பொருள் கொடுத்து 5 கொரிய இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் சசெய்த பாஜக பிரமுகர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’யின் முன்னாள் தலைவரான பாலேஷ் தன்கர் (43) ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். வேலைவாய்ப்பு கொடுப்பதாக விளம்பரங்கள் செய்து தனது வலையில் 5 கொரிய பெண்களை சிக்க வைத்துள்ளார். பின்னர், அவர்களிடம் நெருக்கமாகி  போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், அபடுக்கை அறையில் கடிகாரத்தில் கேமராவை மறைத்து வைத்தும்  வீடியோ எடுத்துள்ளார்.5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தன்கர், 6 வது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட அந்த பெண் பொலிசாரிடம்  புகாரளிக்க அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் பொலிசார்  தன்கரை கைது செய்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில் பாலியல் சீண்டல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், பல வீடியோக்கள் சிக்கியுள்ளது. இதனால், சிட்னியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இந்த ஆண்டு இறுதியில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும் சிட்னி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement