செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார்.
அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்துக்கொண்டு ஏராளமான பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர்.அதனில் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.