• May 18 2024

தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு..! samugammedia

Chithra / Oct 2nd 2023, 10:53 am
image

Advertisement

 

கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில், தேங்காய் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று மாலை  நடாத்தப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்ட காவலாளி இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைத்த நபர் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தான் தேங்காய் திருடுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், தோட்ட காவலாளி துப்பாக்கி பிரயோத்தை நடாத்தியதாக, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தினால் இடது கை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு. samugammedia  கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில், தேங்காய் பறிக்கச் சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று மாலை  நடாத்தப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தோட்ட காவலாளி இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைத்த நபர் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் தேங்காய் திருடுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், தோட்ட காவலாளி துப்பாக்கி பிரயோத்தை நடாத்தியதாக, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.துப்பாக்கி பிரயோகத்தினால் இடது கை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement