• Jul 27 2024

வவுனியாவில் குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தால் பரபரப்பு...! பொலிஸார் விடுத்த கோரிக்கை...!

Sharmi / Apr 10th 2024, 10:47 am
image

Advertisement

வவுனியா - நெளுக்குளம் பகுதியுள்ள குளத்தினுள் இன்று(10)   காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்துள்ளார். 

இதனையடுத்து அவர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

குளக்கட்டின் மேற்பகுதியில் காலணி காணப்படுவதால் இச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்

சடலமாக  மீட்கப்பட்டவர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன், சாரமும் அணிந்துள்ளமையுடன், 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தால் பரபரப்பு. பொலிஸார் விடுத்த கோரிக்கை. வவுனியா - நெளுக்குளம் பகுதியுள்ள குளத்தினுள் இன்று(10)   காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்குளக்கட்டின் மேற்பகுதியில் காலணி காணப்படுவதால் இச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்சடலமாக  மீட்கப்பட்டவர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன், சாரமும் அணிந்துள்ளமையுடன், 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement