• Sep 08 2024

இனவாத தீயை பற்ற வைக்கும் மேத்தானந்த தேரர்..! அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து நாட்டை படுகுழியில் தள்ள முயற்சி! samugammedia

Chithra / Jul 4th 2023, 12:45 pm
image

Advertisement

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக்கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும் கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் எல்லாவெல மேத்தானந்த தேரர்.  இதனை இந்து அமைப்புக்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் என  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

இலங்கைத்தீவில் தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் பௌத்தம் முதலில் கொண்டுவரப்பட்டது என்ற பல உண்மைகளை வரலாற்று தொன்மைகள், ஓலைச் சுவடிகள், பிராமிக் கல்வெட்டுக்கள் ஆதாரப்படுத்துகின்ற போதும் அதனை மறைத்து தமிழ் பௌத்த ஆதாரங்களை சிங்கள பௌத்தமாக மாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இனங்களிடையே இனவாத தீயை பற்ற வைக்கிறார் தேரர்.

முத்துசிவன் அனுராதபுரத்தை அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் முத்துசிவனின் மகன் தீசன் அனுராதபுரத்தை ஆட்சி புரியும் போது தான் பௌத்தம் தீசனின் அனுமதியுடன் இலங்கையில் பரப்பப்பட்டது இதனை மகாவம்சம் கூட பதிவு செய்துள்ளது.

தீசன் பின்னர் தேவநம்பியதீசன் என அழைக்கப்பட்டான் அவனால் முதலாவது விகாரை தூபராமதூபி என்ற பெயரில் புத்தரின் புனிதப் பொருட்கள் வைத்து கட்டப்பட்டது.

இந்த தூபராமதூபி முன்னர் சிங்களத்தில் மாகேஐ கோயில் என அழைக்கப்படும் சைவர்களால் மகேசன் அல்லது மகேஸ்வரன் அல்லது சிவன் என குறிப்பிடப்படும் சிவன் கோயில் இருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களும்  ஆதாரங்களும் கூறுகின்றன. 

கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாக மிக மோசமான பொய்யை சித்தரித்துள்ளார் உண்மையாக கந்தரோடையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் சமாதிகளே அரை உருண்டை வடிவில் அருகருகே அமைக்கப்பட்டிருந்து அவை வழிபாட்டிற்குரிய விகாரைகள் இல்லை.

தேவநம்பிதீசன் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் நாக மன்னர்கள் பிரதேச ரீதியாக ஆட்சி புரியும் போது அவர்களும் தமிழ்ப் பௌத்தம் பரவ ஒத்துழைப்பு வழங்கியதன் ஆதாரமே பௌத்த தொன்மைகளாக காணப்படுகின்றன அவை சிங்கள பௌத்தம் இல்லை.

இலங்கை மிகத் தொன்மை வாய்ந்த சிவபூமி என்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருமூலரின் திருமந்திரத்தில் இலங்கை ஒரு சிவபூமி என்பதற்கான ஆதாரம் உண்டு.

அது மட்டுமல்ல குருந்தவூர் என்ற குருந்தமரம் தொடர்பாக மாணிக்கவாசகரின் திருவாசகம் சிறப்பாக கூறுகின்றது அத்துடன் பஞ்ச ஈச்சரங்கள் அவற்றுள் பாடல் பெற்ற வடகிழக்கின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் சிறந்த சான்றாதாரம். 

ஆகவே மேத்தானந்த தேரர் அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து இனவாத்தை தூண்டி நாட்டை மேலும் படுகுழியில் தள்ள முயல்கிறார். அப்படி என்றால் இந்தியாவில் புத்தகாயாவை சிங்கள பௌத்தமாக தேரரால் அறிவிக்க முடியுமா?


இனவாத தீயை பற்ற வைக்கும் மேத்தானந்த தேரர். அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து நாட்டை படுகுழியில் தள்ள முயற்சி samugammedia வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக்கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும் கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் எல்லாவெல மேத்தானந்த தேரர்.  இதனை இந்து அமைப்புக்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் என  வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.இலங்கைத்தீவில் தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் பௌத்தம் முதலில் கொண்டுவரப்பட்டது என்ற பல உண்மைகளை வரலாற்று தொன்மைகள், ஓலைச் சுவடிகள், பிராமிக் கல்வெட்டுக்கள் ஆதாரப்படுத்துகின்ற போதும் அதனை மறைத்து தமிழ் பௌத்த ஆதாரங்களை சிங்கள பௌத்தமாக மாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இனங்களிடையே இனவாத தீயை பற்ற வைக்கிறார் தேரர்.முத்துசிவன் அனுராதபுரத்தை அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் முத்துசிவனின் மகன் தீசன் அனுராதபுரத்தை ஆட்சி புரியும் போது தான் பௌத்தம் தீசனின் அனுமதியுடன் இலங்கையில் பரப்பப்பட்டது இதனை மகாவம்சம் கூட பதிவு செய்துள்ளது.தீசன் பின்னர் தேவநம்பியதீசன் என அழைக்கப்பட்டான் அவனால் முதலாவது விகாரை தூபராமதூபி என்ற பெயரில் புத்தரின் புனிதப் பொருட்கள் வைத்து கட்டப்பட்டது.இந்த தூபராமதூபி முன்னர் சிங்களத்தில் மாகேஐ கோயில் என அழைக்கப்படும் சைவர்களால் மகேசன் அல்லது மகேஸ்வரன் அல்லது சிவன் என குறிப்பிடப்படும் சிவன் கோயில் இருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களும்  ஆதாரங்களும் கூறுகின்றன. கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாக மிக மோசமான பொய்யை சித்தரித்துள்ளார் உண்மையாக கந்தரோடையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் சமாதிகளே அரை உருண்டை வடிவில் அருகருகே அமைக்கப்பட்டிருந்து அவை வழிபாட்டிற்குரிய விகாரைகள் இல்லை.தேவநம்பிதீசன் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் நாக மன்னர்கள் பிரதேச ரீதியாக ஆட்சி புரியும் போது அவர்களும் தமிழ்ப் பௌத்தம் பரவ ஒத்துழைப்பு வழங்கியதன் ஆதாரமே பௌத்த தொன்மைகளாக காணப்படுகின்றன அவை சிங்கள பௌத்தம் இல்லை.இலங்கை மிகத் தொன்மை வாய்ந்த சிவபூமி என்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருமூலரின் திருமந்திரத்தில் இலங்கை ஒரு சிவபூமி என்பதற்கான ஆதாரம் உண்டு.அது மட்டுமல்ல குருந்தவூர் என்ற குருந்தமரம் தொடர்பாக மாணிக்கவாசகரின் திருவாசகம் சிறப்பாக கூறுகின்றது அத்துடன் பஞ்ச ஈச்சரங்கள் அவற்றுள் பாடல் பெற்ற வடகிழக்கின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் சிறந்த சான்றாதாரம். ஆகவே மேத்தானந்த தேரர் அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து இனவாத்தை தூண்டி நாட்டை மேலும் படுகுழியில் தள்ள முயல்கிறார். அப்படி என்றால் இந்தியாவில் புத்தகாயாவை சிங்கள பௌத்தமாக தேரரால் அறிவிக்க முடியுமா

Advertisement

Advertisement

Advertisement