இலங்கையில் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை உள்நாட்டு நிறுவனங்கள், அதிகரிக்கவேண்டுமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பேக்கரி பொருட்களின் விலையை உடனடியாக 10 ரூபாவினால் குறைக்குமாறும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை கோதுமை மாவினை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து விசே வர்த்தமானி அறிவித்தல் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.