சைப்ரஸில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைப்பிரஸின் தென்கடலோர நகரமான இலார்னாக்காவில் வசிக்கும் அவரது இல்லத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 54 வயதான மெனிக் சுரேகா சீலங்கலகே என்ற பெண்ணே ஜூலை 14 முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவர் தொடர்பான தகவல்கள் அறிந்தால் தெரியப்படுத்துமாறும் அந் நாட்டு பொலிஸார் திங்கட்கிழமை (31) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
54 வயதுடைய பெண், சுமார் 1.60.மீற்றர் உயரம் மற்றும் சாதாரண உடல் எடை கொண்டவர்.
அவர் தொடர்பான விபரம் அறிந்தால் இலார்னாக்கா பொலிஸ் துறையை தொலைபேசியில் 24-804060 அல்லது 1460 என்ற துரித எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.