சீரற்ற வானிலை நிலவி வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, தென் மாகாணத்தில் சில பகுதிகளில் நிவாரணக் குழுக்களை நிலை நிறுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கு அமைய, தெற்கு கடற்படை கட்டளைப்பிரிவினால் காலி, அக்குரஸ்ஸ, கொட்டபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடற்படையினர் நிவாரண குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க இந்த குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படையின் மேலதிக நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகள், பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடற்படை நிவாரண குழுக்கள் தயார் நிலையில். samugammedia சீரற்ற வானிலை நிலவி வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, தென் மாகாணத்தில் சில பகுதிகளில் நிவாரணக் குழுக்களை நிலை நிறுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கு அமைய, தெற்கு கடற்படை கட்டளைப்பிரிவினால் காலி, அக்குரஸ்ஸ, கொட்டபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடற்படையினர் நிவாரண குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க இந்த குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படையின் மேலதிக நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி காலி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகள், பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.