இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை அரசு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றுலா அமைச்சு புதிய கொரோனா நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,கோவிட் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலாப்பயணிகள், வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.