• Sep 08 2024

சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு புதிய பாடசாலை! samugammedia

Chithra / Jul 3rd 2023, 10:56 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கான பாடசாலை ஒன்றினை ஸ்தாபிக்கும்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அந்த பிரதேச உள்ளூராட்சி மன்றத்தை கோரியுள்ளார்.

சுற்றுலாத்துறை பணியாளர்களின் தேவைகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தற்போது உடனடியாக 3 ஆயிரம் பயிற்றப்பட்ட நானாவித சுற்றுலாத்துறை பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே பிரதேசத்திற்கு வருகை தந்த அவர் கடல் வாநூர்தி இறங்குதுறை நிர்மாணத்திற்கான மதிப்பீட்டினை தமக்கு சமர்ப்பிக்கும்படி, பிரதேச செயலாளரை கோரியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்து பலதரப்பினருடன் கலந்தாலோசித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு புதிய பாடசாலை samugammedia அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கான பாடசாலை ஒன்றினை ஸ்தாபிக்கும்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அந்த பிரதேச உள்ளூராட்சி மன்றத்தை கோரியுள்ளார்.சுற்றுலாத்துறை பணியாளர்களின் தேவைகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, தற்போது உடனடியாக 3 ஆயிரம் பயிற்றப்பட்ட நானாவித சுற்றுலாத்துறை பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில், அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே பிரதேசத்திற்கு வருகை தந்த அவர் கடல் வாநூர்தி இறங்குதுறை நிர்மாணத்திற்கான மதிப்பீட்டினை தமக்கு சமர்ப்பிக்கும்படி, பிரதேச செயலாளரை கோரியுள்ளார்.இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்து பலதரப்பினருடன் கலந்தாலோசித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement