புத்தளம் கிவுல பகுதியில் தோட்டமொன்றில் சட்டவிரோதமாக கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரினால் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கஞ்சாச் செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுவருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கஞ்சாச் செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.