சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி கரைச்சி
பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை
அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தமக்கு விரும்பியவர்களுக்கு
வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச
செயலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் முன்பாக சென்று நிறைவடைந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் பார்வைக்காக மகஜர் ஒன்றும் மேலதிகஅரசாங்க அதிபர் சிறிமோகனிடம் கையளிக்கப்பட்டது.