• May 18 2024

மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்..! - சந்தேகநபரின் வாக்குமூலத்தால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார்! samugammedia

Chithra / May 10th 2023, 10:58 am
image

Advertisement

களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்றைய தினம்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது சிக்கியிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், “தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அத்துடன் தான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக் கொள்ள போவதாகவும் சிறுமி கூறியதாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

என்ற போதும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாங்கள் இருவரும் ஒன்றாக அறையில் இருந்தோம். அவள் விருப்பத்துடன் என்னுடன் தங்கினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதன் பிறகு அவள் அசிங்கமான காரியங்களைச் செய்யாதே, நான் இப்போது சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கத்த ஆரம்பித்தாள்.

பின்னர் திடீரென ஜன்னல் அருகே இருந்த கதிரையில் ஏறி ஜன்னல் வழியாக குதித்தாள் என பிரதான சந்தேக நபர் நேற்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.


இருவரும் மனமுவந்து அறையில் இருந்ததாகவும், பிரதான சந்தேகநபரால் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்றிருந்த சந்தேக நபர், படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் அம்பலமானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறித்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்புகள். - சந்தேகநபரின் வாக்குமூலத்தால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் samugammedia களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்றைய தினம்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது சிக்கியிருந்தார்.இதனையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், “தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அத்துடன் தான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக் கொள்ள போவதாகவும் சிறுமி கூறியதாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.என்ற போதும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாங்கள் இருவரும் ஒன்றாக அறையில் இருந்தோம். அவள் விருப்பத்துடன் என்னுடன் தங்கினாள். சிறிது நேரம் கழித்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதன் பிறகு அவள் அசிங்கமான காரியங்களைச் செய்யாதே, நான் இப்போது சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கத்த ஆரம்பித்தாள்.பின்னர் திடீரென ஜன்னல் அருகே இருந்த கதிரையில் ஏறி ஜன்னல் வழியாக குதித்தாள் என பிரதான சந்தேக நபர் நேற்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.இருவரும் மனமுவந்து அறையில் இருந்ததாகவும், பிரதான சந்தேகநபரால் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்றிருந்த சந்தேக நபர், படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் அம்பலமானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல கோணங்களில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குறித்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement